இந்தியா
ஹெலிகாப்டர் விபத்து: சிகிச்சையின் பலனின்றி கேப்டன் வருண்சிங் காலமானார்!
![captain varunsingh9 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/captain-varunsingh9.jpg)
சமீபத்தில் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் பயணம் செய்த 14 பேர்களில் கேப்டன் வருண்சிங் தவிர மீதமுள்ள 13 பேர் உயிரிழந்தார்கள் என்ற நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி வருண்சிங் அவர்களும் உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் குன்னூர் அருகே காட்டேரி என்ற பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான இந்த ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உள்பட 14 பேர் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த விபத்தில் விமானப்படை கேப்டன் வருண்சிங் மட்டும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்பதும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் கேப்டன் வருண் சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில் சற்று முன்னர் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.