தமிழ்நாடு

தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை வானிலை நிலவரம் என்ன?

Published

on

தமிழகத்தில் வருகிற டிசம்பர் 16-ம் தேதி முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வருகிற டிசம்பர் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரையில் தமிழகக் கடலோரப் பகுதிகள் மற்றும் புதுவை ஆகிய இடங்களில் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் கனமழையும் உள்புற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பொழியலாம் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் சென்னைப் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகம் மூட்டத்துடனேயே காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 16-ம் தேதி முதல் அடுத்த 48 மணி நேரத்துக்கு சென்னையில் மிதமான மழைப்பொழிவு தென்படும் என விளக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version