தமிழ்நாடு

5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!- சென்னை நிலவரம் என்ன..?

Published

on

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக டிசம்பர் 16-ம் தேதி முதல் அடுத்தல் ஐந்து நாட்களுக்கு தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மழைப்பொழிவு இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் வானிலை அறிக்கையின் படி கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடனே காணப்படும் என்றும் தெரிகிறது. சென்னை நகரில் ஆங்காங்கே லேசான மழைப்பொழிவுக்கான வாய்ப்பு உள்ளது. உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிகிறது.

Trending

Exit mobile version