தமிழ்நாடு

அடுத்த ஒரு மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம்

Published

on

அடுத்த ஒரு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றியுள்ளதை அடுத்து குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி அடுத்த ஒரு மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தஞ்சை, திருவாரூர், நாகை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை இன்னும் ஒரு மணி நேரத்தில் பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Trending

Exit mobile version