தமிழ்நாடு
தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு: 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மீண்டும் கனமழை
தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த நவம்பர் டிசம்பர் மாதங்களில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது என்பதும் இதனால் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தென் கிழக்கு தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக தென் கடலோரப் பகுதிகளில் மார்ச் 2-ஆம் தேதி மிதமான மழை பெய்யும் என்றும் மார்ச் 3ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை மார்ச் 2-ஆம் தேதி பெய்யும் என்றும் டெல்டா மற்றும் தென் தமிழகம் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது .
தமிழகத்தில் கோடை காலம் நெருங்க இருக்கும் நிலையில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.