தமிழ்நாடு

இன்று உருவாகிறது புதிய தாழ்வு பகுதி: எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும்?

Published

on

வங்க கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகியிருப்பதை அடுத்து எந்தெந்த பகுதியில் மழை பெய்யும் என்பது குறித்து சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த மாதம் அடுத்தடுத்து தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது என்பதும் சில நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக தமிழகத்தில் மழை குறைந்துள்ள நிலையில் மீண்டும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் போன்று இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தோன்றி இருப்பதாகவும், இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் டெல்டா மாவட்டங்களில் உள்ள சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மற்றும் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version