தமிழ்நாடு
2 மணி நேரத்தில் கனமழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றி வரும் அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக இன்றும், நாளையும், நாளை மறுநாளும் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் இன்னும் இரண்டு மணி நேரத்தில் சென்னை உள்பட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களில் கன மழை பெய்யும் என்றும் பொதுமக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
சென்னையில் ஏற்கனவே நேற்று காலை முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வரும் நிலையில் இன்னும் இரண்டு மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்ற அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.