தமிழ்நாடு

சென்னை மக்கள் ஜாக்கிரதை: இடிமின்னலுடன் தீவிர கனமழை: வானிலை எச்சரிக்கை!

Published

on

இன்னும் சில மணி நேரங்களில் சென்னையில் இடி மின்னலுடன் கூடிய தீவிர கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மேகங்கள் சென்னையை நோக்கி நகர்ந்து வருவதாகவும் இதனால் இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னையில் மிக கனமழை பெய்யும் என்றும் ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு வெதர்மேன் அவர்களும் சென்னைக்கு மிககனமழை காத்திருப்பதாகவும் சென்னை மக்கள் கன மழையை சந்திக்க தயாராகும்படி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சற்று முன் வானிலை அறிக்கை ஒன்றில் சென்னைக்கு அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நெல்லை, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே சென்னை கன மழை மற்றும் வெள்ளத்தால் தத்தளித்து வந்த நிலையில் இன்னும் மழையின் ஆபத்து நீங்காமல் இருப்பதால் சென்னை மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.

Trending

Exit mobile version