தமிழ்நாடு
சென்னையில் மீண்டும் மழை, 4 மாவட்டக்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்!
இன்று சென்னையின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்தது என்பதும் இதன் காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாகத்தான் மழை ஓய்ந்து பொதுமக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர் என்பதும் பள்ளி கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று நான்கு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவ காற்று காரணமாக மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.