தமிழ்நாடு

இன்றும் நாளையும் கனமழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்களில்?

Published

on

இன்றும் நாளையும் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கனமழை பெய்து வந்தது என்பதும் தொடர் கனமழை காரணமாக அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வெள்ளக்காடாக மாறியது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல நகரங்களில் தற்போதுதான் மழை மற்றும் வெள்ளத்தில் இருந்து மீண்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி மீண்டும் கனமழை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி கடலூர் ராமநாதபுரம் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நாளை வடகிழக்குப் பருவக்காற்றின் உதாரணமாக அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் பொதுவாக சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version