தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கனமழை தொடரும்: வானிலை மையம் அறிவிப்பு!

Published

on

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்குப் பல மாவட்டங்களில் கன முதல் மிகக் கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

இது குறித்து வானிலை மையம் கூறியுள்ளதாவது:-

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல் மற்றும் வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது.

தென்மேற்குப் பருவக் காற்று காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும். தேனி மாவட்டதில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூனிய கன மழையும், ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

நாளை நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யலாம். கோவையில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version