செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை!

Published

on

சென்னை: தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று உள்ளது. இரண்டு நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. சென்னையிலும் நேற்று மழை பெய்தது.

அதேபோல் நேற்று டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை

முக்கியமாக இன்றிலிருந்து மழை தீவிரமாக பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், சென்னை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய இடங்களில் மழை பெய்யும.

இந்த மழை காரணமாக காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக்கி புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version