தமிழ்நாடு

நள்ளிரவில் சென்னையில் பெய்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

Published

on

சென்னை உள்பட தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில் நேற்று நள்ளிரவு சென்னையில் பல இடங்களில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

சென்னை மாநகர், புறநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு பரவலாக மழை பெய்தது. சென்னை தியாகராய நகர், கிண்டி, மீனம்பாக்கம், தாம்பரம், வேளச்சேரி, தேனாம்பேட்டை, அண்ணாசாலை, கேகே நகர், ராமாபுரம், வளசரவாக்கம், போரூர், வடபழனி, கோயம்பேடு, அம்பத்தூர், ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் அண்ணா நகர், கொளத்தூர், மாதவரம், வில்லிவாக்கம், சோழிங்கநல்லூர், பூந்தமல்லி ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது.

சென்னையில் பெய்த கனமழை காரணமாக சாலையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி இருப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் சென்னையில் நேற்று இரவு நல்ல மழை பெய்ததால் குளிர்ச்சியான தட்பவெப்பநிலை இன்று காலை முதல் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

seithichurul

Trending

Exit mobile version