செய்திகள்

கரையை கடந்த புயல்….வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

Published

on

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி-சென்னை அருகே இன்று காலை காரையை கடந்துள்ளது.

வட கிழக்கு பருவமழை காரணமாக ஏற்கனவே தமிழகத்தில் மழை பெய்து வந்த நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, கடலூர், கன்னியாகுமாரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வந்த நிலையில், தற்போது புயலும் சேர்ந்து கொண்டது.

இதனால் நேற்று காலை முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. சென்னையில் நேற்று இரவு முதல் மழை வெளுத்து வாங்கியது. இன்று அதிகாலை 3 மணி முதல் 4 மணிக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்துவிட்டது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

சென்னைக்கு இடையே கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வட தமிழக கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளது. தொடர்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும். இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், சேலம் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை துறையின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். சென்னையை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Trending

Exit mobile version