தமிழ்நாடு

சென்னையின் பல பகுதிகளில் மழை: மக்கள் மகிழ்ச்சி!

Published

on

சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று மழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில் தற்போது சென்னையில் நல்ல மழை பெய்து வருகிறது

சென்னை ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, சேப்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. அதேபோல் மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், தேனாம்பேட்டை, திநகர், வடபழனி, கிண்டி, வேளச்சேரி, நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் அசோக்நகர், ஜாபர்கான்பேட்டை, அம்பத்தூர், கொரட்டூர் ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 30 நிமிடங்களுக்கு மேலாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்த மழை காரணமாக சென்னையில் பல பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு உள்ளது என்பதும் குறிப்பாக பாரிமுனை பகுதியில் 35 நிமிட நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் சாலையில் மழைநீர் தேங்கி இருப்பதன் காரணமாக இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஊர்ந்து சென்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் ஒரு சில பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் ஒட்டுமொத்தமாக சென்னையில் வாகனங்கள் ஆங்காங்கே நின்று கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சரியாக அலுவலகம் முடிந்து பொதுமக்கள் வீடு திரும்பி கொண்டிருக்கும் நேரத்தில் மழை பெய்து வருவதால் வாகனங்களை பொதுமக்கள் ஆங்காங்கே நிறுத்தி விட்டு மழைக்காக ஒதுங்கி உள்ள காட்சிகளையும் பல இடங்களில் பார்க்க முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version