தமிழ்நாடு

தென் தமிழகத்தின் இம்மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

Published

on

ஜனவரி மாதத்தின் பாதி முடிந்த பின்னரும் இன்னும் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து கொண்டிருக்கிறது. இது தமிழகத்துக்கு மிகவும் புதிதான ஒரு விஷயமாக இருக்கிறது. இந்நிலையில் இன்றும் தென் தமிழகத்தின் பல இடங்களில் மழை தொடரும் என்றும் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம் கூறியிருப்பதாவது:

இன்று தென் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும். அதேபோல தமிழகத்தின் பிற இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம், மேக மூட்டத்துடன் இருக்கும். மழைக்கான வாய்ப்புகள் குறைவாகத்தான் இருக்கிறது. இவ்வாறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் சென்ற ஆண்டு, வழக்கத்தை விட அதிக மழை பொழிவு இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version