தமிழ்நாடு
தமிழகத்துக்கு அடுத்த மூன்று நாட்கள் கனமழை: வானிலை ஆய்வு மையம்!
![Heavy Rain 1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/07/Heavy-Rain-1.jpg)
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்து பல நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னமும் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. இந்நிலையில் வெப்பத்தை குறைக்கும் குளிர்ச்சி தரும் செய்தி ஒன்றை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்திலடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பிருக்கிறது.
மேலும் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது, சென்னையை பொருத்தவரை இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.