தமிழ்நாடு

அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை: 2 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

Published

on

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழை பெய்யும் எனவும், 2 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறித்தியுள்ளது.

மாலத்தீவு மற்றும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் தென்மேற்கு திசையில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுமென்பதால் மீனவர்களை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக மழைபெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version