தமிழ்நாடு

இன்னும் 3 மணி நேரத்தில் கொட்டப்போகுது கனமழை: 19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Published

on

தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில் இன்னும் 3 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் தோன்றியுள்ள புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும் நாளையும் நாளை மறுநாளும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது தெரிந்ததே.

தற்போது சென்னையில் இருந்து 620 கிலோ மீட்டர் தொலைவிலும் காரைக்காலில் இருந்து 560 கிலோ மீட்டர் தொலைவிலும் மாண்டஸ் புயல் நிலை கொண்டிருப்பதாகவும் இந்த புயல் மெதுவாக நகர்ந்து நாளை நள்ளிரவு ஸ்ரீஹரிகோட்டா மற்றும் புதுவை இடையே கரையை கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது

இதன் காரணமாக சென்னை உள்பட 19 மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் இன்னும் 3 மணி நேரத்தில் மழை பெய்யும் மாவட்டங்கள் பின்வருவன: சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம்

seithichurul

Trending

Exit mobile version