தமிழ்நாடு

4 மாவட்டங்களில் இன்று கொட்டப்போகுது கனமழை: வானிலை அறிவிப்பு!

Published

on

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது என்பதும் இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதை அடுத்து அதன் காரணமாக நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென் தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நெல்லை, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழ்நாட்டின் இதர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Trending

Exit mobile version