தமிழ்நாடு

14 மாவட்டங்கள்… அடுத்த 3 நாட்கள்… கனமழை எச்சரிக்கை..!

Published

on

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக தென் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்குக் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், வட தமிழகக் கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழைப்பொழிவு காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்த வரையில் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு வானம் மேகம் மூட்டம் நிறைந்து காணப்படும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. நகரின் சில இடங்களில் ஆங்காங்கே லேசான மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னைப் புறநகர் பகுதிகளிலும் வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடனே காணப்படும் எனத் தெரிகிறது. அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் லேசான மழைப்பொழிவு காணப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version