தமிழ்நாடு
4 மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்!
![kerala rain - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/kerala-rain.jpg)
சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யக்கூடும் என்றும் இதனால் இந்த நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இதன் காரணமாக மக்கள் இரண்டு நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி பத்திரமாக வைத்துக்கொள்ள முடிவு சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு காரணமாக ஞாயிற்றுக்கிழமை வரை தமிழகத்தில் உள்ள பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அறிவித்துள்ளது
மேலும் கள்ளக்குறிச்சி, மதுரை,சிவகங்கை,விருதுநகர், புதுக்கோட்டை தென்காசி ,தேனி,திண்டுக்கல், கரூர், திருச்சி,அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, சேலம் ,டெல்டா ,மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கனமழை குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நவம்பர் 18ஆம் தேதி அன்று சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். எனவே சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கும் தாழ்வான இடங்களில் மழைநீரை உடனடியாக வெளியேற்ற 600க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.