செய்திகள்
3 நாட்களுக்கு தொடர்மழை; 5 மாவட்டங்களில் கனமழை : வானிலை மையம்
![rain chennai36 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/rain-chennai36.jpg)
தமிழகத்தில் நிலவி வரும் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே, கடந்த 10 நாட்களுக்கும் மேல் தமிழகத்தில் சில மாவடங்களில் கனமழை பெய்து வந்தது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர் போன்ற கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
இந்நிலையில், வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று பத்டிஹ்ற்கும் மேற்பட்ட மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதோடு, அந்தமான் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் நாளை முதல் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும் எனவும், மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், 25 மற்றும் 26ம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.