செய்திகள்
அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை
வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. சென்னையில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கொண்டிருப்பதாகவும் இதன் காரணமாக சென்னை மற்றும் வட தமிழக கடற்கரை பகுதிகளிலும் ஆந்திராவில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கிலிருந்து வடமேற்கு திசைக்கு நகர்ந்து வட தமிழகத்திற்கும் தென் ஆந்திராவுகு இடையே நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவண்ணாமலை, சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், சென்னை, திருவள்ளூர், கடலூர், வேலூர், நாகை, காஞ்சிபுரம், நாமக்கல், ராணிப்பேட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.