சினிமா செய்திகள்

கொரோனா விதியை மீறினாரானா? கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்க தமிழக அரசு முடிவு?

Published

on

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகிய கமல்ஹாசன் அவர்கள் தமிழக அரசின் கொரோனா விதிமுறைகளை மீறி உள்ளதாகவும் இதுகுறித்து அவரிடம் விசாரணை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு வரும் நிலையில் கமல்ஹாசனிடம் இதுகுறித்து விளக்கம் கேட்கப்படும் என சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பதும் கடந்த சனிக்கிழமை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பதும் அன்றைய தினமே அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலிருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்கள் வீடு திரும்பியவுடன் ஏழு நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்பது தமிழக அரசின் கொரோனா விதிமுறைகளில் ஒன்றாக இருக்கும் நிலையில் அவர் வீட்டில் தனிமைப்படுத்துதலில் இல்லாமல் டிஸ்சார்ஜ் ஆன தினமே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இது குறித்த கேள்விக்கு பதிலளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நடிகர் கமல்ஹாசன் ஏழு நாட்கள் தனிமையில் இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றது குறித்து விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version