தமிழ்நாடு

லிப்ட் கேட்டு வந்த சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்!

Published

on

அரசு விழாவிற்கு சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு வந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது

சென்னை தண்டையார்பேட்டை மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சிக்காக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் இறுதி ஊர்வலம் சென்று கொண்டிருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நிகழ்ச்சிக்கு நேரமானதால் காரை விட்டு இறங்கிய ராதாகிருஷ்ணன், வேறு வழியின்றி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவருடன் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளார். ராதாகிருஷ்ணன் இருசக்கர வாகனத்தில் வந்ததைப் பார்த்து அங்கிருந்த அதிகாரிகள் ஆச்சரியத்தில் உறைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து லிப்ட் கொடுத்த திருவொற்றியூரை சேர்ந்த பிரபு என்ற இளைஞர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுகாதாரத்துறை செயலரை டிவியில் பார்த்து இருக்கிறேன். அவர் அரசு அதிகாரியாக இருந்த போதிலும் லிப்ட் கொடுப்பீர்களா எனக் கேட்டு நான் சரி என்று சொன்ன பிறகுதான் வாகனத்தில் ஏறினார். அவருடன் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் அவருக்கு அவசரமாக நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றதால், அவருடன் அந்த நிகழ்ச்சிக்கு சென்று, முடியும் வரை காத்திருந்து அவருடன் செல்பி எடுத்து கொண்டேன் என்றார்.

Trending

Exit mobile version