தமிழ்நாடு
ஒரே பள்ளியை சேர்ந்த 20 மாணவிகளுக்கு கொரோனா: தஞ்சையில் பரபரப்பு!
தஞ்சையில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 20 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து தமிழக அரசின் சுகாதாரத் துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை என்ற பகுதியை சேர்ந்த மகளிர் பள்ளியில் படிக்கும் 20 மாணவிகளுக்கு திடீரென கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த 20 மாணவிகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும் அந்த பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அந்த பள்ளிக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஒரே பள்ளியில் படிக்கும் 20 மாணவிளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.