சினிமா செய்திகள்

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் உடல்நிலை எப்படி உள்ளது?

Published

on

பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநர், எஸ்.பி.ஜனநாதன், உடல்நலக் குறைவால் சென்னை, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு்த தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜனநாதன் இறந்து விட்டதாக, சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது. ஆனால், அதில் உண்மையில்லை என்று ஜனநாதனுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

‘இயற்கை’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான ஜனநாதன், அடுத்ததாக ‘ஈ’, ‘பேராண்மை’, ‘புறம்போக்கு’ ஆகிய படங்களை எடுத்துப் பாராட்டுகளைப் பெற்றார். இயற்கை படத்திற்காக அவர் தேசிய விருதையும் வென்றார். தற்போது விஜய் சேதுபதியை வைத்து ‘லாபம்’ என்கிறப் படத்தை எடுத்து முடித்துள்ளார்.

அந்தப் படத்திற்கான எடிட்டிங் பணியில் ஈடுபட்டு வந்தார் ஜனநாதன். இந்நிலையில் நேற்று வீட்டில் ஜனநாதன், மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனால் பதற்றமடைந்த அவரது உதவியாளர்கள் ஜனநாதனை உடனடியாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவரைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து கண்காணித்து வருகிறார்கள் மருத்துவர்கள். விரைவில் அவர் உடல் நலம் குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதனால் அவரது உடல்நிலை குறித்து தேவையில்லாமல் வதந்தி பரப்ப வேண்டாம் என்று ஜனநாதனுக்கு நெருக்கமாக உள்ள பலர் கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக இயக்குநர் அமீர், ‘இயக்குநர் ஜனநாதன் அவர்களுக்கு நேற்றைய தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தினால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உறுதி செய்யப்படாத தகவல்களை யாரும் பகிர வேண்டாம்’ எனக் கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version