தமிழ்நாடு

ஆக்ஸிஜன் அதிகரிப்புக்கு ‘ஹீலர் பாஸ்கர்’ சொல்லும் விபரீத யோசனை- போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?

Published

on

கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்படும் நபர்களுக்கு சுவாசம் என்பது மிகப் பெரிய பிரச்சனையாக மாறி விடுகிறது. கொரோனா வைரஸ், நுரையீரல் பகுதியைத் தான் அதிகம் தாக்குகிறது என்பதால் முறையாக சுவாசிப்பது என்பது குறைந்து, உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் அளவு குறைந்து விடுகிறது.

இதனால் செயற்கையாக ப்யூர் ஆக்ஸிஜன் என்பது மிகவும் அவசியமாகிறது. தற்போது பல வட மாநிலங்களில் கொரோனா தொற்று தீவிரமடைந்து, முறையாக ஆக்ஸிஜன் சப்ளை இல்லாமல் பலர் தினம் தினம் இறந்து வருகிறார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முறையான ஆக்ஸிஜன் சப்ளை இல்லாமல் 13 பேர் இறந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்படி கொரோனாவால் செயற்கை ஆக்ஸிஜன் மிகவும் அவசியமாக இருக்கும் சூழலில் சர்ச்சைக்குரிய நபரான ‘ஹீலர்’ பாஸ்கர் உடலில் ஆக்ஸிஜனை அதிகரிக்க விபரீத யோசனையை வழங்கியுள்ளார்.

அவர் வழங்கியுள்ள யோசனை ஆன்லைனில் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

 

seithichurul

Trending

Exit mobile version