இந்தியா

ஒரு லிட்டர் பால் விலை ரூ.100.. வேளான் சட்டம் எதிராக புதிய உத்தியைக் கையில் எடுத்த விவசாயிகள்!

Published

on

வேளான் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஹரியானா விவசாயிகள் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் என அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு அமலுக்குக் கொண்டு வரத் துடிக்கும் வேளான் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் செயல்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், வேளான் சட்டத்துக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக ஹரியானாவின் ஹிசாரில் உள்ள பஞ்சாயத்து ஒன்று, அரசு பால் கூட்டுறவு நிறுவனங்கள் லிட்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் அளிக்க வேண்டும் என்று உறுதிமொழி ஏற்றுள்ளது.

இந்த பால் விலை உயர்வு அரசு கூட்டுறவு பால் நிறுவனங்களுக்கு மட்டும்தான். பொதுமக்களுக்கு ஒரு லிட்டர் பால் 55 முதல் 60 ரூபாய்க்குள் விற்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version