சினிமா செய்திகள்

பி.சுசிலாவுக்கு ஹரிவராசனம் விருது – கேரள அரசு அறிவிப்பு!

Published

on

ஆண்டுதோறும் கேரள அரசு சார்பில் ஐயப்ப புகழை பரப்பும் கலைஞர்களுக்கு ஹரிவராசனம் விருது மகர விளக்கு பூஜை முடிந்ததும் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதினை பிரபல பின்னணி பாடகி பி.சுசிலாவுக்கு வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

ஜனவரி 14ம் தேதி சபரிமலையில் மகர விளக்கு பூஜை கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதன் பின்னர், வரும் ஜனவரி 17ம் தேதி பந்தளத்தில் உள்ள கலையரங்கில் நடைபெறும் கலை நிகழ்ச்சியில் பி.சுசிலாவுக்கு ஹரிவராசனம் விருதினை வழங்க முடிவு செய்துள்ளனர். விருது பெறும் பி.சுசிலாவுக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்படும்.

seithichurul

Trending

Exit mobile version