இந்தியா
மாநிலங்களவை துணைத் தலைவரானார் ஹரிவன்ஷ்: பாஜக கூட்டணி வெற்றி
டெல்லி: மாநிலங்களவை துணைத் தலைவருக்கான தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் வெற்றிபெற்று இருக்கிறார்.
இன்று மாநிலங்களவை துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் எம்.பி.ஹரிவன்ஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் ஹரிபிரசாத் ஆகியோர் இதில் போட்டியிட்டனர்.
மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியனின் பதவிக் காலம் கடந்த மாதம் முடிந்தது. இதை அடுத்து, மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் தற்போது நடந்தது.
மாநிலங்களவையில் தற்போது இருக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை 244.இதில் வெற்றி பெற 123 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
தேர்தல் முடிவில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி 120 வாக்குகள் பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணிக 105 வாக்குகள் பெற்றது. இதனால் வெற்றிபெற்ற ஹர்வன்ஷ் நாராயண் சிங் மாநிலங்களவை துணைத் தலைவராக தேர்வானார்.