தமிழ்நாடு

ஹரிநாடார் பிரச்சாரத்திற்கு அதிக கூட்டம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள் அதிர்ச்சி!

Published

on

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதி ஏற்கனவே ஸ்டார் தொகுதியாக இருந்த நிலையில் ஹரிநாடார் என்ற வேட்பாளர் காரணமாக தற்போது கூடுதல் அந்தஸ்தை பெற்றுள்ளது.
ஆலங்குளம் தொகுதியில் திமுக சார்பில் பூங்கோதை ஆலடி அருணா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மகன் மனோஜ் பாண்டியன் போட்டியிடுகிறார்.

இந்த தொகுதியில் போட்ட்யிடும் இருவருமே தொகுதிக்கு மிகவும் அறிமுகமானவர்கள் என்பதும் இதனால் இந்த தொகுதி ஸ்டார் தொமுதி என்ற தகுதியைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென பனங்காட்டு படை கட்சியின் சார்பில் ஹரி நாடார் என்பவர் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். அதிமுக திமுக கூட்டத்தை விட இவருக்கு தான் அதிக கூட்டம் சேர்கிறது என்று கூறப்படுகிறது.

இவர் ஒரு நடமாடும் நகைக்கடையாக 11 ஆயிரத்து 800 கிராம் நகையுடன் வலம் வந்து பிரசாரம் செய்து வருகிறார். அவரை விட அவர் அணிந்திருக்கும் நகையை பார்க்க கூட்டம் அதிகம் வருகிறது என்பதும் குறிப்பாக பெண்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கு சவால் விடும் வகையில் ஹரிநாடார் மிக அதிகமான வாக்குகளை பெறுவார் என்றும் அவர் வெற்றி பெறுகிறதோ இல்லையோ கண்டிப்பாக அவரது போட்டி இந்த தொகுதியில் உள்ள திமுக, அதிமுக ஆகிய இரண்டு வேட்பாளர்களில் ஒருவருக்கு சிக்கல் தான் என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version