இந்தியா

ஹரி நாடார் தான் என்னுடைய கணவர்: இரண்டு பெண்கள் மாறி மாறி புகார் அளித்ததால் பரபரப்பு!

Published

on

நடிகை விஜயலட்சுமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிநாடார் என்னுடைய கணவர் தான் என இரண்டு பெண்கள் மாறி மாறி காவல்துறையில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை விஜயலட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென தற்கொலைக்கு முயற்சி செய்தார். அப்போது அவர் கொடுத்த வாக்குமூலத்தில் ஹரிநாடார் தன்னை மிரட்டியதாக தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில் ஹரிநாடார் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சமீபத்தில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நெல்லையை சேர்ந்த ஹாலினி என்ற பெண் ஹரிநாடார் என்னுடைய கணவர் என்றும் அவரை கடந்த 2011ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம் என்றும் நான் தான் உண்மையான மனைவி என்றும் ஆனால் ஹரிநாடாடின் வழக்கு ஆவணங்களில் கேரளாவில் உள்ள மஞ்சு என்ற பெண் தான் மனைவி என்று குறிப்பிடப்பட்டு உள்ளது என்றும் அவர் புகார் அளித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் மஞ்சு இதுகுறித்து கூறிய போதும் நாங்கள் இருவரும் கணவன் மனைவிகள் என்றும் தற்போது ஒன்றாக வாழ்ந்து வருகிறோம் என்றும் நான் தான் உண்மையான மனைவி என்றும் தெரிவித்துள்ளார்.

மஞ்சு மற்றும் ஹாலினி ஆகிய இருவரும் மாறி மாறி தாங்கள்தான் ஹரிநாடாரின் மனைவி என புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version