கிரிக்கெட்
பந்தை விட வேகமாக பறந்த பேட்: ஹர்திக் பாண்ட்யா குறித்து வர்ணனையாளர்!
நேற்றைய போட்டியில் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாடிய போது அவருடைய கையில் இருந்து பேட் நழுவி சென்றதால் பந்தை விட அதிக தூரம் பேட் சென்றதாக வர்ணனையாளர்கள் காமெடியாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் 67வது லீக் போட்டிகள் குஜராத் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்த நிலையில் பெங்களூர் அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது என்பதும் புள்ளி பட்டியலில் தற்போது நான்காவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை நடைபெறும் போட்டியில் டெல்லி அணி தோல்வி அடைந்தால் பெங்களூர் அணிக்கு பிளே ஆப் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது 10 ஓவரில் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா சிக்சர் அடிப்பதற்காக பந்தை வேகமாக அடித்தார். அப்போது அவரது கையில் இருந்த பேட் நழுவி, பந்தை விட மிக வேகமாக பறந்து சென்றது. இதைப்பார்த்த வர்ணனையாளர் காமெடியாக வர்ணனை செய்து அனைவரும் ரசிக்கும் வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.