கிரிக்கெட்

INDvENG- முதல் போட்டியிலேயே கலக்கிய குருணல் பாண்டியா; இன்டர்வியூ செய்த ஹர்திக் பாண்டியா!

Published

on

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று நடந்தது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 317 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி, 251 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் 98 ரன்கள் விளாசிய தொடக்க வீரர்களில் ஒருவரான ஷிகர் தவான், ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் அறிமுகமான குருணல் பாண்டியா, அரைசதம் விளாசி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

ஆட்டம் முடிந்த பின்னர் முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்தது பற்றி கேட்டபோது உணர்ச்சி வசப்பட்டு குமுறி குமுறி அழுத்துள்ளார் குருணல். இதைத் தொடர்ந்து அவரது சகோதரர் ஹர்திக் பாண்டியா, குருணலை தேற்றினார். இது குறித்தான காணொலிகள் பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது.

‘இது எனக்கு கனவு நனவான தருணம் தான். என் கடுமையான உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன். நம் தந்தையின் ஆசீர்வாதம் இருந்ததால் இது சாத்தியமானது. அவர் இன்று என்னைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்திருப்பார்’ என ஹர்திக் பாண்டியாவுடனான கலந்துரையாடலின் போது நெகிழ்ச்சிப் பொங்க பகிர்ந்து கொண்டார் குருணல்.\

பாண்டியா சகோதரர்களின் தந்தை சில மாதங்களுக்கு முன்னர் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version