சினிமா செய்திகள்

எனது கணவர் தலைமறைவாகவில்லை: நடந்தது என்ன என்பது குறித்து நடிகை ஆர்த்தி விளக்கம்!

Published

on

பிரபல காமெடி நடிகை ஆர்த்தியின் கணவர் கணேஷ் கார் விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில் தனது கணவர் தலைமறைவாகவில்லை என ஆர்த்தி விளக்கமளித்துள்ளார்.

சம்பவத்தன்று தான் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று இரிந்ததாகவும், தன்னை பிக்கப் செய்வதற்காக தனது கணவர் கணேஷ்கர் காரில் வந்து கொண்டிருந்ததாகவும் அப்போது சாலையில் இருந்த ஸ்பீட் பிரேக்கை கவனிக்காமல் வேகமாக கார் ஓட்டியதால் கார் விபத்துக்குள்ளானதாகவும் ஆர்த்தி தெரிவித்துள்ளார் .

இந்த விபத்தில் படுகாயமடைந்த கணேஷ்கரை அந்த பகுதியில் உள்ளவர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர் என்றும் பின்னர் தனக்கு தகவல் அளித்தனர் என்றும் கூறினார் .

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று தனது கணவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறி விட்டு தான் வீட்டுக்கு சென்றதாகவும், ஆனால் தனது கணவர் அப்பல்லோ மருத்துவமனை செல்லாமல் நண்பருடைய வீட்டிற்கு சென்றதால் தான் அவர் தலைமறைவாகி விட்டதாக வதந்தி கிளப்பி விட்டது என்றும் தனது கணவர் தலைமறைவாக இல்லை என்றும் எந்த விசாரணைக்கும் ஒத்துழைப்பு அளிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version