சினிமா
ஹேக்கர்கள் அட்டகாசம்; கடுப்பில் ரகுல் ப்ரீத் சிங்!
நடிகை த்ரிஷாவை தொடர்ந்து ரகுல் ப்ரீத் சிங்கின் சமூக வலைதள கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.
நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் பக்கம் நேற்று முன் தினம் முடக்கப்பட்ட நிலையில், தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.
ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று படங்களை தொடர்ந்து என்ஜிகே, தேவ் என தமிழில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அதேபோல என்.டி.ஆர் படத்தில் ஸ்ரீதேவியாகவும் நடித்துள்ளார்.
இந்நிலையில், அவரது இன்ஸ்டா பக்கம் ஹேக் செய்யப்பட்டதால் டென்சஷனில் உள்ளாராம் ரகுல் ப்ரீத் சிங். உடனடியாக ஹேக்கில் இருந்து வெளிபட சைபர் கிரைமையும் நாடியுள்ளதாக தகவல்.