இந்தியா
பெங்களூரு SAP நிறுவன ஊழியர்களுக்கு H1N1 பன்றிக்காய்ச்சல்; அதிர்ச்சியில் ஊழியர்கள்!
ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் SAP நிறுவனத்தின் இந்தியக் கிளையில் உள்ள 2 ஊழியர்களுக்குப் பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
H1N1 வைரஸூம் அபாயகரமானது என்பதால், SAP நிறுவனம் இந்தியாவில் பெங்களூரு, மும்பை மற்றும் குர்காமில் உள்ள தங்களது கிளை அலுவலகங்களை மூடியுள்ளது.
நிறுவனத்திடம் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை, ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே பணியைச் செயலாம் என்று SAP நிறுவனம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் 132 பேர் பாதிப்படைந்துள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கடந்த 7 ஆண்டுகளில் பன்றிக் காய்ச்சலால் 8 ஆயிரம் பே இறந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறையின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.