தமிழ்நாடு

காங்கிரஸ் கட்சி உருப்பட வேண்டும் என்றால் இதை முதலில் செய்யுங்கள்: எச்.ராஜா

Published

on

காங்கிரஸ் கட்சி உருப்பட வேண்டுமென்றால் முதலில் இதை செய்யுங்கள் என பாஜக பிரமுகர் எச்.ராஜா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5 மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அதில் ஒரு மாநிலத்தில் கூட காங்கிரஸ் கட்சி வெற்றி பெறவில்லை என்பது மட்டுமின்றி ஏற்கனவே ஆட்சியில் இருந்த பஞ்சாபில் ஆட்சியை இழந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தேசிய கட்சியாக இருந்த காங்கிரஸ் மாநில கட்சியாக மாறி வரும் நிலையில் மாநில கட்சியாக இருந்த ஆம் ஆத்மி தேசிய கட்சியாக மாறி வருகிறது இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி உருப்பட வேண்டும் என்றால் நேரு குடும்பத்தை தூக்கி எறிய வேண்டும் என்றும் அப்போது தான் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் உள்ளது என்றும் ராஜா தெரிவித்துள்ளார்.

ங்கிரஸ் கட்சிக்கு மக்கள் இந்த தேர்தல் முடிவின் மூலம் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர் என்றும் இதனை வைத்து புரிந்துகொண்டு நேரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரையும் தூக்கி எறிந்தால் அந்த கட்சிக்கு எதிர்காலம் உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2024 தேர்தலிலும் மோடிதான் மீண்டும் பிரதமர் ஆவார் என்றும் தற்போதைய தேர்தல் முடிவுகளை அதற்கு சாட்சி என்றும் அவர் தெரிவித்தார்.

 

seithichurul

Trending

Exit mobile version