தமிழ்நாடு
புளி பழுப்பது சாம்பாருக்குதான்: ஸ்டாலினை கலாய்க்கும் பாஜக!
தமிழக சட்டசபை சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் கொடுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதனை தற்போது வலியுறுத்தப்போவதில்லை என பின்வாங்கியுள்ளார். இது பல்வேறு விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் கடலூரில் நேற்று முன்தினம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நான் சொல்கிறேன் இந்த ஆட்சி விரைவில் கவிழப்போகிறது என்பதுதான் உண்மை என்று குறிப்பிட்டார். மேலும், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வலியுறுத்தாதது என்பது புலி பாய்வதற்கு முன் பதுங்குவது போல என்றும் கூறினார்.
மு.க.ஸ்டாலின் புலி பதுங்குவது பாய்வதற்கு தான் என கூறியதை தமிழக பாஜக தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார். மு.க.ஸ்டாலின் புலியா? இல்லை பூனையா? என்பதை நினைத்தால், கவலையாக உள்ளது என அவர் கூறியுள்ளார். இந்நிலையில் இதனை தனது டுவிட்டரில் குறிப்பிட்டு பதில் அளித்துள்ளார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, அதில், புளி பழுப்பது சாம்பாருக்குதான் என கூறி மு.க.ஸ்டாலினை கலாய்த்துள்ளார்.