தமிழ்நாடு

சிவகங்கையில் பாஜக வேட்பாளர் எச்.ராஜா அதிக வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவு!

Published

on

நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று காலை முதலே நடந்து வருகிறது. இதில் பெரும்பாலான தொகுதிகளின் முன்னிலை நிலவரம் வெளியாகி வருகிறது. இதில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எச்.ராஜா பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

தமிழகத்தில் சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் அதன் தேசிய செயலாளர் எச்.ராஜா போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரமும், அமமுக சார்பில் பாண்டியும் போட்டியிட்டனர். இந்நிலையில் தற்போது சிவகங்கை தொகுதிக்கான முன்னிலை நிலவரம் வெளியாகி உள்ளது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பின்னடைவை சந்தித்துள்ளார்.

காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 21967 வாக்குகளை பெற்றுள்ளார், பாஜக வேட்பாளர் எச்.ராஜா 8321 வாக்குகளும், அமமுக வேட்பாளர் பாண்டி 5475 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன் மூலம் கார்த்தி சிதம்பரம் 13646 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் எச்.ராஜா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார்.

Trending

Exit mobile version