தமிழ்நாடு
சென்னை உயர் நீதிமன்றத்தில் எச்.ராஜா ஆஜர்!
![H Raja - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/10/H-Raja-1.jpg)
நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் ஆஜராக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தார்.
கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க அனுமதிக்காத காவல்துறையையும், நீதிமன்றத்தையும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டினார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் எச்.ராஜா மீது வழக்குகள் பதியப்பட்டது.
ஆனால் தமிழக காவல்துறை கடைசி வரை எச்.ராஜாவை கைது செய்யவில்லை. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.செல்வம் அமர்வு எச்.ராஜா மீது தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து, அவருக்கு நோட்டிஸ் அனுப்பியது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடக்க உள்ளது. இதனையடுத்து இன்று காலை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வந்த எச்.ராஜா நீதிபதி சி.டி. செல்வம், நிர்மல்குமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு ஆஜராகியதாக கூறப்படுகிறது.