தமிழ்நாடு

பத்திரிக்கையாளரிடம் எச்.ராஜா காட்டம்: கம்யூனிஸ்ட் மவுத் பீசுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டேன்!

Published

on

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர் செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்க முற்பட்டபோது கம்யூனிஸ்ட் மவுத் பீசுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டேன் என எரிச்சலுடன் கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.

பாஜகவின் எச்.ராஜா அதிரடியாகவும், சர்ச்சைக்குறிய வகையிலும் பேசுவதில் பெயர்பெற்றவர். ஊடகங்கள் முன்னிலையில் பலமுறை ஆவேசமாக பேசியுள்ள இவர் இன்று செய்தியாளர் ஒருவரையே புறக்கணித்துவிட்டு எரிச்சலுடன் எழுந்து சென்ற சம்பவமும் நடந்துள்ளது.

இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில், திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து, திமுக, காங்கிரஸ் கட்சிகள் குறித்தான விமர்சனம், சபரிமலை விவகாரம், அறநிலையத்துறை ஊழல், ரஃபேல் விவகாரம், ஸ்டெர்லைட் விவகாரம், ஜெயலலிதா சிகிச்சை விவகாரம் என பல துறைகள் குறித்து பேசினார் எச்.ராஜா.

அப்போது, தீக்கதிர் நிருபர் ஒருவர் எச்.ராஜாவிடம் கேள்வி எழுப்ப கம்யூனிஸ்ட் பத்திரிகையா என காட்டமாக எச்.ராஜா கேட்டார். சீனாக்காரன் கம்யூனிஸ்ட் தாஸ் கேப்பிட்டல் தத்துவம் அந்நிய நாட்டு இறக்குமதி இந்து விரோதி அவனின் மவுத் பீசுக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன் என எரிச்சலுடன் அங்கிருந்து எழுந்து சென்றார் எச்.ராஜா.

seithichurul

Trending

Exit mobile version