செய்திகள்
ஆஸ்திரேலியா பிரதமர் மோடிக்கு கொடுத்ததே திருட்டு சிலைதான்.. உளறிய எச்.ராஜா!
சென்னை: பிரதமர் மோடிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பரிசளித்த நடராஜர் சிலை தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சிலையே என்று எச்.ராஜா குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி அப்பாட் கடந்த 2014 செப்டம்பர் மாதம் இந்தியா வந்தார். அப்போது அவர் இந்திய பிரதமர் மோடிக்கு இரண்டு சிலைகளை பரிசளித்தார்.
அந்த சிலைகள் ஆஸ்திரேலியாவின் அரசு அரும்பொருள் கண்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்த சிலை ஆகும்.
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பரிசளித்த நடராஜர் சிலை தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சிலையே, இங்கிருந்து முறையாக ஒன்னும் அங்கே எடுத்து செல்லப்படவில்லை என்று எச்.ராஜா குற்றச்சாட்டு வைத்துள்ளார்.