சினிமா செய்திகள்

பாலா இயக்கும் 3 ஹீரோ படத்தில் புக்கானார் ஜி.வி.பிரகாஷ்!

Published

on

வர்மா பட சர்ச்சையைத் தொடர்ந்து மூன்று ஹீரோக்கள் நடிக்கும் படம் ஒன்றைப் பாலா இயக்க உள்ளார்.

இந்த படத்தில் சூர்யா, ஆர்யா, அதர்வா உள்ளிட்டவர்கள் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்போது புதிதாக ஜி.வி.பிரகாஷ் இந்த படத்தில் புக் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே பாலா இயக்கத்தில் பரதேசி படத்திற்கு இசை அமைத்த ஜி.வி.பிரகாஷ், நாச்சியார் படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

எனவே ஹீரோக்களில் மாற்றமா, இல்லை ஜி.வி.பிரகாஷ் இசை மட்டும் அமைக்க உள்ளாரா என்று தெரியவில்லை.

ஆனால் பாலா தனக்கு இது ஒரு கம்பேக் படமாக இருக்க வேண்டும் என்று மிகக் கவனமாகச் செயல்பட்டு வருகிறாராம்.

seithichurul

Trending

Exit mobile version