ஜோதிடம்

குருவின் அதிரடி ஆரம்பம்: இந்த 4 ராசிக்கு அளப்பரிய பலன்கள் நிச்சயம்!

Published

on

ரிஷப ராசியில் சஞ்சரித்து வரும் குரு பகவான் அக்டோபர் 9-ம் தேதி முதல் வக்ர நிலையைப் பெற்று பயணிக்கிறார். 2025-ல் மே 14-ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சியாவார். இந்த மாற்றங்களின் மூலம் சில ராசிகளுக்கு மிகச் சிறப்பான பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ரிஷப ராசி:

குருவின் வக்கிர நிலை ரிஷப ராசியினருக்கு செல்வம் சேர்க்கும் வாய்ப்பு வழங்கும். உங்கள் குடும்பத்தில் மங்கலமான நிகழ்வுகள் நடைபெறும். நிதிநிலை முன்னேற்றம் காணலாம், ஆனால் செலவுகள் கூடுவதால், செலவுகளை திட்டமிடுவது அவசியம். புதிய வேலை அல்லது தொழிலைத் தொடங்குவதற்கான சாதகமான சூழல் ஏற்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

சிம்ம ராசி:

குரு பகவானின் சஞ்சாரம், சிம்ம ராசியில் கர்ம ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானங்களில் மிகவும் நன்மைகளை தரும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வாய்ப்புகள் வரும். வாழ்க்கை துணையுடன் உள்ள மனக்கசப்புகள் நீங்கும், ஒற்றுமை அதிகரிக்கும். நிதி நன்மைகள் அதிகரிக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி சூழல் ஏற்படும்.

கன்னி ராசி:

குரு பகவானின் அமைப்பு கன்னி ராசியினருக்கு பலவகையான நன்மைகளை தரும். தடைப்பட்ட வேலைகள் மீண்டும் தொடங்கும். பதவி உயர்வு மற்றும் புதிய பொறுப்புகளில் சிறந்த பலன்கள் கிடைக்கும். இலக்குகளை சரியான நேரத்தில் அடைய முடியும். குடும்பத்தில் சுபிட்சம் வரும், வேலை தொடர்பாக வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணங்கள் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும்.

Poovizhi

Trending

Exit mobile version