Connect with us

இந்தியா

3 நாட்கள் முதல் மனைவி, 3 நாட்கள் 2வது மனைவி.. ஞாயிறு அன்று தனிமை.. இளைஞரின் வித்தியாசமான வாழ்க்கை..!

Published

on

குருகிராம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மூன்று நாள் முதல் மனைவியுடனும் மூன்று நாட்கள் இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருவதாகவும் ஞாயிற்றுக்கிழமை தனிமையில் இருப்பதாகவும் வெளிவந்திருக்கும் செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை திருமணம் என்பது புனிதமானது என்றும் ஒருவருக்கு ஒருத்தி என்ற நடைமுறையை கடைப்பிடித்து வருகின்றது என்பது தெரிந்ததே. ஆனால் சில சமயம் விதிகளுக்கு முரணாக ஒருவர் இரண்டு திருமணங்களையும் அதற்கு மேல் செய்து கொள்ளும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் குருகிராம் பகுதியைச் சேர்ந்த பொறியாளர் சீமா என்ற பெண்ணை கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இரண்டு வருடங்கள் ஒற்றுமையாக வாழ்ந்த இந்த தம்பதியருக்கு ஒரு மகன் பிறந்தார். இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு அந்த இளைஞர் தனது மனைவியை அவருடைய பெற்றோரின் வீட்டிற்கு அழைப்புச் சென்றார். மனைவியை சில நாட்கள் அவருடைய பெற்றோரின் வீட்டிலேயே தங்கட்டும் என்று அவர் வீடு திரும்பிய நிலையில் திடீரென கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் அந்த இளைஞரின் மனைவி மாத கணக்கில் அவருடைய பெற்றோரின் வீட்டிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் கணவருக்கு வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர் ஆன பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் இருவரையும் நெருக்கமாகிவிட இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒரு பெண் குழந்தைக்கு பெற்றோர் ஆனார்கள். இந்த நிலையில் ஊரடங்கு முடிந்தவுடன் மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்த சீமா, தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து அவர் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து பேசினார்.

தனக்கும் தனது மகனுக்கும் நிவாரணம் வேண்டும் என்று அவர் கூறிய போது மத்தியஸ்தர்கள் இறுதியாக ஒரு உடன்படிக்கையை எட்டினர். அதன்படி வாரத்தின் முதல் மூன்று நாட்கள் முதல் மனைவியிடனும் அடுத்த மூன்று நாட்கள் இரண்டாவது மனைவியிடமும் இளைஞர் வாழ வேண்டும் என்றும் ஞாயிற்றுக்கிழமை தனிமையில் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரண்டு மனைவிகளுக்கும் இரண்டு தனித்தனி வீடுகள் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டியது இளைஞரின் பொறுப்பு என்றும் மத்தியஸ்தர்கள் கூறினர்.

இதனை அடுத்து வாரத்தில் மூன்று நாள் முதல் மனைவியுடனும் மூன்று நாள் இரண்டாவது மனைவியிடம் வாழ்ந்து வரும் இளைஞர் ஞாயிறு மட்டும் தனிமையில் நிம்மதியாக காலத்தை கழித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
வணிகம்22 மணி நேரங்கள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!