ஜோதிடம்

குரு புஷ்ய யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம்!

Published

on

பூச நட்சத்திரத்தில் சூரியனின் பெயர்ச்சி பலருக்கு நல்ல பலனை வழங்குகிறது. சூரியன் சுமார் 30 நாட்களுக்கு பிறகு தனது ராசியை மாற்றி சஞ்சரிக்கிறார். கிரகங்களின் அரசனான சூரியனின் பெயர்ச்சி பூசம் நட்சத்திரத்தில் நடந்துள்ளது. இதன் விளைவாக உருவாகும் குரு புஷ்ய யோகம் அக்டோபர் 24 ஆம் தேதி காலை 11:45 மணிக்கு தொடங்கி, அக்டோபர் 25 ஆம் தேதி நள்ளிரவு 12:31 வரை நீடிக்கும். பூசம் நட்சத்திரத்தில் சூரிய பகவான் வருவதால் மிதுனம் உள்ளிட்ட 3 ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் தொடங்கியுள்ளது.

பூசம் நட்சத்திரமே புஷ்யம் எனப்படும். சாதாரண நாட்களில் பூசம் நட்சத்திரம் ஏற்பட்டால் அது அசுபமாகக் கருதப்படும். ஆனால், குருவிற்கு உகந்த நாளான வியாழக்கிழமையில் பூசம் நட்சத்திரமும் இணைந்து வந்தால், அப்போது குரு புஷ்ய யோகம் உருவாகிறது. இந்த 30 நாட்களில், அந்த குறிப்பிட்ட ராசியின் கீழ் வரும் வெவ்வேறு நட்சத்திரங்களின் வழியாக சூரியன் சஞ்சரிக்கிறார். இதனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து பார்ப்போம்.

ரிஷபம்: குரு புஷ்ய யோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகளைத் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மகத்தான வெற்றிகளை அடைவார்கள். பணியிடத்தில் சக ஊழியர்களின் முழு ஆதரவையும் பெறுவார்கள். வியாபாரம் விரிவடையும் மற்றும் காதல் பிரச்சனைகள் நீங்கும்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு உண்டாகும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வணிக ஒப்பந்தங்கள் முடிவடையும், அதனால் லாபமும் அதிகமாக வரும். குடும்ப உறவுகள் வலுவடையும் மற்றும் வேலையில் அதிர்ஷ்டம் ஏற்படும்.

மீனம்: மீன ராசியினருக்கு குரு புஷ்ய யோகம் மிகவும் சாதகமாக அமையப் போகிறது. வியாபாரத்தில் புதிய லாபம் கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் ஏற்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். நீண்ட நாட்களாக ஓர் நோயின் தாக்கத்தால் அவதியுற்று வந்தால் அதில் இருந்து நிவாரணம் கிடைக்கும். சமயம் தொடர்பான காரியங்களில் ஆர்வம் காணப்படுவதாக இருக்கலாம். போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்பில் இருக்கும்வர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.

Poovizhi

Trending

Exit mobile version