ஜோதிடம்
குரு கொட்டுவார், செவ்வாய் கூட்டணி.. 12 ஆண்டுகளுக்குப் பிறகு அதிர்ஷ்ட ராசிகள்!
குரு பகவான் மற்றும் செவ்வாய் பகவான் இருவரும் ஒரே ராசியில் பயணத்தை தொடங்கியுள்ள நிலையில், இதனால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை வழங்க உள்ளனர். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் போன்றவற்றிற்கு காரணியாக இருப்பவர், செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குகின்றார். இந்த இரு கிரகங்களும் ரிஷப ராசியில் சேர்ந்து பயணிக்கின்றனர், இது 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பதாகும்.
அனைத்து ராசிகளுக்கும் இதனால் மாற்றங்கள் ஏற்படும், ஆனால் சில ராசிகளுக்கு மட்டும் மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கப்போகின்றன. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிகள் என்னென்னவென்று பார்க்கலாம்:
மேஷ ராசி:
குரு மற்றும் செவ்வாய் பகவான்கள் சேர்ந்து உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பார்கள். பணம் பெருகும், எதிர்பாராத வருமானம் கிடைக்கும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியாக முடியும். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
மகர ராசி:
உங்கள் ராசியில் குரு மற்றும் செவ்வாய் சேர்ந்து பயணிக்கின்றனர். இவை உங்களுக்கு மகிழ்ச்சியை அதிகரிக்க செய்கின்றது. குழந்தைகளால் நற்செய்தி கிடைக்கும், வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். பெற்றோரின் முழு ஆதரவு உங்களுக்கு இருக்கும்.
கும்ப ராசி:
குரு மற்றும் செவ்வாய் கூட்டணி உங்களுக்கு சொத்து, வீடு, வாகனங்கள் போன்றவற்றை பெறும் வாய்ப்பை அதிகரிக்கும். தொழிலில் லாபம், பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற நன்மைகளை அனுபவிப்பீர்கள்.